ஜெனீவாவில் மார்ச் மாதம்
இலங்கைக்கு அமெரிக்கா தலைமையில் எதிராக கொண்டுவரப் படவுள்ள போர்க்குற்ற மற்றும்
மனித உரிமைகள் மீறல் பிரேரணை இன்று தேசத்தினதும் பிராந்தியத்தினதும் கவனத்தை
கவ்வியுள்ளது.
சரவதேச மற்றும் பிராந்திய அரங்கில் மேலைத்தேய ஆசிய மற்றும் தென்னாசிய சக்திகளுக்கிடையிலான பனிப்போர் போன்றதொரு அதிகாரப் போட்டா போட்டியிற்கு இலங்கையின் கள நிலவரங்களை சாதகமாக்கிக் கொடுப்பதில் இலங்கை வெளிவிவகார அமைச்சும் பாரிய பங்களிப்பினைச் செய்துள்ளதாகவே எனக்குத் தெரிகிறது.
சரவதேச சமூகம் என அழைக்கப்படும் மேலைத்தேய முதலாளித்துவ மேலாதிக்க சக்திகளின் காலடியில் புலம்பெயர்ந்த தமிழர்களையும் தமிழ் தேசிய அரசியலையும் கதியென்று கிடக்கச் செய்வதில் தற்போதைய அரசியல் தலைமை குறிப்பாக போருக்குப் பின்னர் செய்துவருகின்ற பாரிய அரசியல் தவறுகள் அதன் எதிர்காலத்தை கேள்விக்குறியாக்கியுள்ளது.
சாணக்கியமாகவும் சமயோசிதமாகவும் குறிப்பாக அரசியல் ரீதியாக அரவணைத்துக் கொள்ளப் படவேண்டிய ஜனநாயக நீரோட்டத்தில் உள்ள தமிழ்த்தேசிய தலைமையினை குறிப்பாக வடமாகாண சபை நிர்வாகத்தினை இந்த அரசியல் தலைமை தமக்கு சாதகமாக வென்று கொள்ளாது பாரிய அரசியல் இராஜதந்திர பிழைகளை செய்து வருகிறது.
அதேபோன்று தமக்கு எதிராக சர்வதேசமே சுனாமிபோல் திரண்டு வருகின்ற ஒரு சூழ்நிலையில் தேசத்தின் சுதந்திரத்திற்கும் ஒருமைப் பாட்டிற்கும் சமாதான சகவாழ்விற்கும் பாரிய பங்களிப்பினைச் செய்த அதேபோன்று யுத்தத்திலும் சமாதானத்திலும் பாரிய விலையினைச் செலுத்தியுள்ள முஸ்லிம் சமூகத்தின் மீது கட்டவிழ்த்துவிடப் பட்டுள்ள காடைத் தனங்களை அரசினால் கட்டுப் பாட்டிற்குள் கொண்டுவர முடியாமல் போனமை அல்லது அவ்வாறான தரப்புக்களை அரசில் பங்காளிகளாக கொண்டுள்ளமை தற்போதைய அரசியல் தலைமை தமக்குத் தாமே இழைத்துக் கொண்டுள்ள மிகப் பெரும் அரசியல் தவறாகும்.
சர்வதேச முஸ்லிம் உம்மத்தாயினும் சரி, இலங்கை முஸ்லிம் சமூகமாயினும் சரி சர்வதேச சமூகம் எனும் மேலைத்தேய யூத சியோனிச மேலாதிக்க சக்திகளின் மீது நம்பிக்கை வைக்காவிடினும், தேசிய அரசியலில் முஸ்லிம்களது நிலை சரணாகதியாகவும் அதேவேளை பெரும் அவநம்பிக்கையை தோற்றுவித்துள்ளமையும் கவலைக்கிடமான அம்சமாகும்.
அதிகாரத்தையும் அச்சுறுத்தலையும் அல்லது பேரின மேலாதிக்கத்தையும் நேரடியாகவோ மறைமுகமாகவோ முஸ்லிம் அரசியல் சிவில் மற்றும் சன்மார்கத் தலைமைகளின் மீது பிரயோகிப்பதன் மூலம் இலங்கையின் எந்தவொரு அரசியல் தலைமையும் தத்தமது சொந்த அரசியலையும் மொத்த தேசிய அரசியலையும் முகவர்களூடாக முன்கொண்டு செல்ல முயல்வதாயின் அது மிகப் பெரிய வரலாற்றுத் தவறாக மாறிவிடலாம்.
ஆட்சியில் உள்ள எந்த அரசாயினும் இதய சுத்தியுடன் சிறுபன்மயினரோடு குறிப்பாக முஸ்லிம்களோடும் சமாதன சகவாழ்விற்கான அடித் தளங்களை இடாவிடின் அதேவேளை சர்வதேச பிராந்திய சக்திகளின் கூலிப் படைகளாக தொழிற்படும் இன மத வெறியர்களை பூரண கட்டுப் பாட்டிற்குள் கொண்டுவராவிடின் மத்திய கிழக்கில் பதட்டத்திற்கு பாலஸ்தீன் மையமாக இருப்பதுபோல் பிராந்தியத்தில் பதட்டத்திற்கு இலங்கை மையமாக மாறிவிடலாம் என்பதில் சந்தேகமில்லை.
தற்போதைய அரச தலைமையை (இலங்கையை அல்ல) சர்வதேச அரங்கில் ஆட்சி மாற்றத்தினை இலக்காகக் கொண்டு தனிமைப் படுத்தவே இலங்கையில் கூலிப்படைகளைக் கொண்டு இனமத வெறி பிரச்சாரங்களை நோர்வே அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் போன்ற நாடுகள் மேற்கொள்வதனை பல்வேறு தரப்புக்களும் உணர்த்தியுள்ள நிலையிலும் அரசியல் தலைமை முஸ்லிம் சமூகத்தின் உள்ளக மற்றும் சர்வதேச அரசியல் பரிமாணங்களை அவற்றின் சரியான கோணங்களில் உள்வாங்கத் தவறியுள்ள அதேவேளை அவற்றின் அரிச்சுவடிகளைக் கூட சரணாகதி முஸ்லிம் அரசியல் தலைமைகள் அறியவில்லை அல்லது அதற்கான அடிப்படைத் தகைமைகள் அவற்றிடம் இல்லை என்பதுவும் மிகவும் கவலைக் குரிய விடயமாகும்.
சரவதேச மற்றும் பிராந்திய அரங்கில் மேலைத்தேய ஆசிய மற்றும் தென்னாசிய சக்திகளுக்கிடையிலான பனிப்போர் போன்றதொரு அதிகாரப் போட்டா போட்டியிற்கு இலங்கையின் கள நிலவரங்களை சாதகமாக்கிக் கொடுப்பதில் இலங்கை வெளிவிவகார அமைச்சும் பாரிய பங்களிப்பினைச் செய்துள்ளதாகவே எனக்குத் தெரிகிறது.
சரவதேச சமூகம் என அழைக்கப்படும் மேலைத்தேய முதலாளித்துவ மேலாதிக்க சக்திகளின் காலடியில் புலம்பெயர்ந்த தமிழர்களையும் தமிழ் தேசிய அரசியலையும் கதியென்று கிடக்கச் செய்வதில் தற்போதைய அரசியல் தலைமை குறிப்பாக போருக்குப் பின்னர் செய்துவருகின்ற பாரிய அரசியல் தவறுகள் அதன் எதிர்காலத்தை கேள்விக்குறியாக்கியுள்ளது.
சாணக்கியமாகவும் சமயோசிதமாகவும் குறிப்பாக அரசியல் ரீதியாக அரவணைத்துக் கொள்ளப் படவேண்டிய ஜனநாயக நீரோட்டத்தில் உள்ள தமிழ்த்தேசிய தலைமையினை குறிப்பாக வடமாகாண சபை நிர்வாகத்தினை இந்த அரசியல் தலைமை தமக்கு சாதகமாக வென்று கொள்ளாது பாரிய அரசியல் இராஜதந்திர பிழைகளை செய்து வருகிறது.
அதேபோன்று தமக்கு எதிராக சர்வதேசமே சுனாமிபோல் திரண்டு வருகின்ற ஒரு சூழ்நிலையில் தேசத்தின் சுதந்திரத்திற்கும் ஒருமைப் பாட்டிற்கும் சமாதான சகவாழ்விற்கும் பாரிய பங்களிப்பினைச் செய்த அதேபோன்று யுத்தத்திலும் சமாதானத்திலும் பாரிய விலையினைச் செலுத்தியுள்ள முஸ்லிம் சமூகத்தின் மீது கட்டவிழ்த்துவிடப் பட்டுள்ள காடைத் தனங்களை அரசினால் கட்டுப் பாட்டிற்குள் கொண்டுவர முடியாமல் போனமை அல்லது அவ்வாறான தரப்புக்களை அரசில் பங்காளிகளாக கொண்டுள்ளமை தற்போதைய அரசியல் தலைமை தமக்குத் தாமே இழைத்துக் கொண்டுள்ள மிகப் பெரும் அரசியல் தவறாகும்.
சர்வதேச முஸ்லிம் உம்மத்தாயினும் சரி, இலங்கை முஸ்லிம் சமூகமாயினும் சரி சர்வதேச சமூகம் எனும் மேலைத்தேய யூத சியோனிச மேலாதிக்க சக்திகளின் மீது நம்பிக்கை வைக்காவிடினும், தேசிய அரசியலில் முஸ்லிம்களது நிலை சரணாகதியாகவும் அதேவேளை பெரும் அவநம்பிக்கையை தோற்றுவித்துள்ளமையும் கவலைக்கிடமான அம்சமாகும்.
அதிகாரத்தையும் அச்சுறுத்தலையும் அல்லது பேரின மேலாதிக்கத்தையும் நேரடியாகவோ மறைமுகமாகவோ முஸ்லிம் அரசியல் சிவில் மற்றும் சன்மார்கத் தலைமைகளின் மீது பிரயோகிப்பதன் மூலம் இலங்கையின் எந்தவொரு அரசியல் தலைமையும் தத்தமது சொந்த அரசியலையும் மொத்த தேசிய அரசியலையும் முகவர்களூடாக முன்கொண்டு செல்ல முயல்வதாயின் அது மிகப் பெரிய வரலாற்றுத் தவறாக மாறிவிடலாம்.
ஆட்சியில் உள்ள எந்த அரசாயினும் இதய சுத்தியுடன் சிறுபன்மயினரோடு குறிப்பாக முஸ்லிம்களோடும் சமாதன சகவாழ்விற்கான அடித் தளங்களை இடாவிடின் அதேவேளை சர்வதேச பிராந்திய சக்திகளின் கூலிப் படைகளாக தொழிற்படும் இன மத வெறியர்களை பூரண கட்டுப் பாட்டிற்குள் கொண்டுவராவிடின் மத்திய கிழக்கில் பதட்டத்திற்கு பாலஸ்தீன் மையமாக இருப்பதுபோல் பிராந்தியத்தில் பதட்டத்திற்கு இலங்கை மையமாக மாறிவிடலாம் என்பதில் சந்தேகமில்லை.
தற்போதைய அரச தலைமையை (இலங்கையை அல்ல) சர்வதேச அரங்கில் ஆட்சி மாற்றத்தினை இலக்காகக் கொண்டு தனிமைப் படுத்தவே இலங்கையில் கூலிப்படைகளைக் கொண்டு இனமத வெறி பிரச்சாரங்களை நோர்வே அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் போன்ற நாடுகள் மேற்கொள்வதனை பல்வேறு தரப்புக்களும் உணர்த்தியுள்ள நிலையிலும் அரசியல் தலைமை முஸ்லிம் சமூகத்தின் உள்ளக மற்றும் சர்வதேச அரசியல் பரிமாணங்களை அவற்றின் சரியான கோணங்களில் உள்வாங்கத் தவறியுள்ள அதேவேளை அவற்றின் அரிச்சுவடிகளைக் கூட சரணாகதி முஸ்லிம் அரசியல் தலைமைகள் அறியவில்லை அல்லது அதற்கான அடிப்படைத் தகைமைகள் அவற்றிடம் இல்லை என்பதுவும் மிகவும் கவலைக் குரிய விடயமாகும்.
அஷ்-ஷெய்க் இனாமுல்ல மஸீஹூத்தீன்
No comments:
Post a Comment